காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
1757 ஜூன் 23இல் நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்டார். ராபர்ட் கிளைவ் மீர் ஜாபரின் இரகசிய ஆதரவைப் பெற்றிருந்தார். இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் சுமார் 190 ஆண்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது.
விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்பு
- ஃபராசி இயக்கம் (1818): ஹாஜி ஷரியத்துல்லா தொடங்கினார்; அவருக்குப் பின் மகன் தூது மியான் தலைமை ஏற்றார்
- வகாபி கிளர்ச்சி (1827): வங்காளத்தின் பாரசாத் பகுதியில் டிட்டு மீர் தலைமையில் நடந்தது
- கோல் கிளர்ச்சி (1831-32): சோட்டா நாகபுர் பகுதியில் பிந்த்ராய், சிங்ராய் தலைமையில் நடந்தது
- சாந்தால் கிளர்ச்சி (1855): சிது, கானு சகோதரர்கள் தலைமையில் நடந்தது
- முண்டா கிளர்ச்சி: பிர்சா முண்டா தலைமையில் நடந்தது; 1900 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்தார்
1857 பெரும் கிளர்ச்சி
1857இல் பிரிட்டிஷ் ஆட்சி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது. வங்காள சிப்பாய்களின் கலகமாகத் தொடங்கி, பின்னர் பல பகுதிகளில் மக்கள் எழுச்சியாக விரிவடைந்தது.
- என்ஃபீல்ட் துப்பாக்கியின் கொழுப்பு பூசப்பட்ட தோட்டா - மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என வதந்தி
- மங்கல் பாண்டே - 1857 மார்ச் 29 அன்று ஆங்கிலேய அதிகாரியை தாக்கினார்
- 1857 மே 11 - மீரட் சிப்பாய்கள் டெல்லி சென்று பகதூர் ஷா II-ஐ இந்துஸ்தான் பேரரசராக அறிவித்தனர்
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கம் (1885)
| விவரம் | குறிப்பு |
|---|---|
| நிறுவனர் | ஏ.ஓ. ஹியூம் (ஓய்வுபெற்ற ஆங்கிலேய அதிகாரி) |
| முதல் மாநாடு | 1885 டிசம்பர், பம்பாய் (கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரி) |
| முதல் தலைவர் | உமேஷ் சந்திர பானர்ஜி (வியோமேஷ் சந்திர பானர்ஜி) |
| தொடக்ககால தேசியவாதிகள் | தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி |
மிதவாத தேசியவாதிகள்
ஆங்கிலேயர் இந்தியாவின் செல்வத்தை உறிஞ்சுகிறார்கள் என்ற 'செல்வ வடிகால்' (Drain of Wealth) கோட்பாட்டை தாதாபாய் நௌரோஜி முன்வைத்தார். மிதவாதிகள் மனுக்கள், கோரிக்கைகள், விண்ணப்பங்கள் மூலம் ஆங்கிலேய அரசை நிர்ப்பந்திக்க முயன்றனர்.
வங்கப் பிரிவினையும் சுதேசி இயக்கமும் (1905)
- வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க லார்ட் கர்சன் 1905இல் முடிவெடுத்தார்
- இது 'பிரித்தாளும்' கொள்கையின் வெளிப்பாடு
- இதற்கு எதிராக சுதேசி இயக்கமும் புறக்கணிப்பு இயக்கமும் தொடங்கின
- தீவிரவாத தேசியவாதிகள்: பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால்
- திலகர் முழக்கம்: "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்"
தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம்
அன்னிபெசன்ட் மற்றும் திலகர் 1916இல் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினர். திலகர் ஏப்ரல் 1916இல் பூனாவிலும், அன்னிபெசன்ட் செப்டம்பர் 1916இல் அடையாறிலும் தனித்தனியாக ஹோம் ரூல் லீக் நிறுவினர்.