தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்
விண்ணியல அறிவு:
· உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
· ஆன்மஇயல் ஏசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது
|
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. |
· பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது.
· உலகம் என்னும் தமிழ்ச்சொல் ”உலவு ” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும்.
· ஞாலம் என்னும் சொல் ”ஞால் ” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் ”தொங்குதல் ”.
· வானத்தில் காற்றில்லாப் பகுதி உண்டு எம்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனை ”வறிது நிலைஇய காயமும் ” என்னும் புறநானூறு வரி விளக்குகிறது.
· “வலவன் ஏவா வானூர்தி ” என்னும் புறநானூற்றுத் தொடரினால் தமிழர்கள் வானூர்தியை விண்ணில் செலுத்தி இருக்கலாம் என அறியப்படுகிறது.
பொறியியல் அறிவு:
· கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
· இதனைத் ”தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த ” என்னும் பதிற்றுபத்து வரிகள் குறிப்பிடும்.
· நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதனை, ”அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் ” என்னும் பெருங்கதை வரியின் வாயிலாக அறியமுடிகிறது.
· பெருங்கதையில் வரும் எந்திர யானை கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் ”டிராய் ” போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஒத்தது.
கனிமவியல் அறிவு:
· சிலப்பதிகாரம் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குகிறது.
· ஊர்கான் காதையில்,
|
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் |
என்னும் இவ்வடிகள் ஐவகை மணிகளை விளக்குகிறது.
மண்ணியல் அறிவு:
· தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்ப பாகுபடுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். மேலும் செம்மண், களர்நிலம், உவர்நிலம் எனவும் பகுத்துள்ளனர்.
· நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலம் எனவும், சுவையின் அடிப்படையில் உவர்நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர்நிலம் எனவும் நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
· செம்மண் நிலத்தை அதன் பயன் கருதிப் போற்றினர். இதனைச் ”செம்புலப் பெயல் நீர்போல ” என்னும் குறுந்தொகை வரி உணர்த்தும்.
· உவர்நிலம், மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன்தருவதில்லை. இதனை, ”அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம் ” என்னும் புறநானூறு வரிகள் விளக்குகிறது.
· எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம். இதனைப் ”பயவாக் களரனையர் கல்லாதவர் ” என்பார் திருவள்ளுவர்.
அணுவியல் அறிவு:
· ஔவை, ”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி’ என்று சொல்கிறார்.
· “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் ” எனக் கம்பர் கூறுவார்.
· இதன் மூலம் அணுச்சேர்ப்பும் அனுப்பிரிப்பும் பற்றிய கருத்துக்கள் அறியப்பட்டுள்ளது.
நீரியல் அறிவு:
· நீரியல் இயக்கமே உலகை வளப்படுத்துகிறது.
· இதனை, திருவள்ளுவர் தன் குரலில் கூறியுள்ளார்.
|
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் |
மருத்துவ அறிவு:
· “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் ” என்பார் திருமூலர்.
· திருவள்ளுவர் ”மருந்து ” என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.
· இன்று பரவலாகப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர்.
|
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் |
அறுவை மருத்துவம்:
· “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர் ” என்னும் கம்பரின் வாக்கு அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
· மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவி சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
· “புல்லாகிப் பூடாய் ” என்னும் திருவாசக வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாய் கூறுகின்றன.
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும் ” எனத் தொடங்கும் பாடலடிகள் கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கின்றன